கே.எஸ்.ஆர். கல்லூரி - தமிழ்மணம் இணையப் பயிலரங்கு, திருச்செங்கோடு, 14.03.2009, சனிக்கிழமை

அன்புடைய தமிழ் வலைப்பதிவர்களே,

வரும் சனிக்கிழமை (14-3-2009) தினத்தில் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், தமிழ்மணம் வலைத்திரட்டி நிர்வாகமும் இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கு நடத்த இருக்கிறோம். இந்த இணைய விழாவைப் பற்றி விரிவாக முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பூவில் செய்தி இருக்கிறது. தமிழ்மணம் முகப்பிலும் தொடுப்புள்ளது. ஈரோடு நகரத்தின் பத்திரிகைகளில் செய்தி வெளிவர இருக்கிறது.
http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_9901.html

திருச்செங்கோடு இணையப் பயிலரங்க நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் வலைஞர்கள் கண்டு களிக்கும் வகையில் சங்கமம் தளத்தினர் ஒளிபரப்புகின்றனர். சங்கமம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புத் தொடுப்பு:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=329

திருச்செங்கோடு பழமையான ஊர். சிலப்பதிகாரத்தில் திருவேரகம் என்று பாராட்டப்படும் ஊர். அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்தது. அப்பொழுது சுவாமிமலைக்கு வெண்குன்று என்று பெயர். பின்னர் பல நூற்றாண்டு ஆன பின்னர் சுவாமிமலை ஏரகம் ஆகியிருக்கிறது. மார்ச் 14 உலகப்புகழ் பெற்ற இயல்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினமாகும். ஐன்ஸ்டைன் திருநாளில் (π 'பை' தினம்) தமிழில் கணினி அறிவியல், இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் வலைத்திரட்டியின் பங்களிப்பு போன்றவை பற்றிப் பயிலரங்கு திருச்செங்கோட்டில் நடக்கிறது. பல தமிழர்க்கும் அறிமுகம் செய்யும் களப்பணி. இணைய வேகம் கூடக்கூட, அதன் பயனும் தமிழ்நாட்டில் வரும்காலங்களில் அதிகரிக்கும் (உ-ம்: 3ஜி சேவை). வலைப்பூக்கள் நிறைய மலர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இது தொடக்கம் தான். இலட்சக்கணக்கானோர் இணையத்தை நாம் இப்போது மின்சாரம் பாவிப்பதுபோல் வருங்காலங்களில் பயன்படுத்த எழுத்து சுதந்திரம் கிடைத்துப் பல புதிய செய்திகள், கலைச் செல்வங்கள் தமிழில் சேர்ந்து சமூக மறுமலர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கேஎஸ்ஆர் கல்லூரி நிர்வாகமும், கல்வெட்டு அறிஞர்கள் முனைவர் செ. இராசு, புலவர் வெ.இரா. துரைசாமி, கரூரில் இருந்து வரலாற்றறிஞர் இராசசேகர தங்கமணி, புதுச்சேரி முனைவர் மு. இளங்கோ, ... பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

நீங்களும் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊக்கம் தரும். வலைப்பதிவிலும் எழுதுங்கள்.

நன்றி!
நா. கணேசன்

தமிழ் வளர வழிவகைகள்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html

தமிழ் இணையப்பயிலரங்கம் - 14.03.2009 நிகழ்ச்சி நிரல்

காலை 10.00 - தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்பு - திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை - முனைவர் த.கண்ணன்
அறிமுகவுரை - முனைவர் இரா.சந்திரசேகரன்
தொடக்கவுரை - புலவர் செ.இராசு
விருந்தினர்களைச் சிறப்பித்தல்

முதல் அமர்வு முற்பகல்
முனைவர் மு.இளங்கோவன் தலைப்பு - தமிழும் இணையமும்
முனைவர் இரா.குணசீலன் - வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை

முனைவர் மு.இளங்கோவன் - இணைய இதழ்கள்
தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம், விக்கி பயனாளிகள்
திரு.ப.சரவணன் - இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு
முனைவர் த.கண்ணன் - தமிழ் வலைப்பதிவுகள்
திரு.செல்வமுரளி - இணையத்தளப் பாதுகாப்பு
நிறைவு விழா - நாட்டுப்பண்

Hello Friend,

Tamilmanam ( http://tamilmanam.net ) has conducted Bloggers' workshops at different venues and colleges to promote Tamil computing over the last several years increasing Awareness about the possibilities of Internet in Tamils' social and scientific growth. For example in the last Summer (June 7, 2008), we did the Tamilmanam computing workshop at Tirunelveli:
http://nganesan.blogspot.com/2008/05/tirunelveli-june7-meeting.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_8712.html

Now this coming Saturday (14/March/12009), Tamilmanam and Dept. of Tamil, K.S.R. College of Arts and Science is doing another Bloggers' Workshop at Tiruchengode. It will be broadcast over the Web live. Many Tamil experts like Dr. S. Rasu, Prof. Rajasekara Thangamani (Dept. of History, Karur), Dr. V. R. Duraisamy (Epigrapher), Dr. Mu. Elango (Pudhucheri), ... are coming to Tiruchengode to particpate. Free Lunch will be served, and the announcements are in Tamilmanam muhappu, as well as in Erode newspapers.

Please inform your friends and relatives to attend if possible.

N. Ganesan

Pictures from Tamilmanam Workshop, Tinneveli, Summer 2008.
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_1278.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_5603.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_9550.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_20.html

2 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

ஐயா வணக்கம்
பயிலரங்கம் பற்றிய தங்கள் பதிவுக்கு நன்றி.பேராசிரியர் இராசசேகர தங்கமணியைத் தாங்ங்கள் அறிவீர்களா?அவர் எனக்கும் அன்புக்கு உரியவர்களே.அவர் மகன் அமெரிக்ககாவில் இருப்பதாக முன்பு அறிந்தேன்.
முழு விவரம் தெரியவில்லை.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Anonymous said...

மிசா சட்டத்தின் போது ‘காரோட்டி’ கண்ணப்பன் எனப்பட்ட மு.கண்ணப்பன் வை.கோவை விட்டுட்டார். தாய்க்கழகம் போவார்னு செய்தி பார்த்தீங்களா?