செம்மொழி தமிழ் மாநாட்டு இலச்சினையில் சிந்துக் குறியீடுகள் - World Classical Tamil Conference (CBE 2010) Logo


செம்மொழி மாநாடு இலச்சினை (கோவை, 2010) - World Classical Tamil Conference logo


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 4 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தனி சின்னம் (இலச்சினை) உருவாக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையின் படி கோவையில் 2010, ஜூன் திங்கள் 24-ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரை நடைபெறவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இலச்சினையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.

நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி, தொல்லியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு. ஞானதேசிகன், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் க.அலாவுதீன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் க.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இலச்சினை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதுபற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:-

கடல்கோள்களை எதிர்கொண்டும், காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கேற்ப மூன்றுவிரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக்கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம் பெறுகின்றன. சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சிந்துநதிக்கரையில் 1500 ஏக்கர் பரப்பளவில் செழித்தோங்கி 700 ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்துவெளி நாகரிகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள்- எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழமண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம் கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.

படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய திறன்மிகு வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

இலச்சினையில் ஏழு குறியீடுகள் சின்னங்கள் இடம் பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு. திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு என்னும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும். ஏழு என்பது "எழு" என்பதாகவும் "எழுபதில்" இடம் பெறும். இலக்கை எட்டுவதற்கு எழுவது எழு என்பதாகவும் அமைகிறது.

இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அமைந்துள்ளது. ஓலைச்சுவடியில் இடம் பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாகக் கருதத்தக்கது. இன்றைய உலகின் தேவை நல்லிணக்கம், சாதி, மதம் கடந்து மக்கள் மனநிறைவோடு வாழும் மனிதநேயம் செறிந்த வாழ்க்கை. இதற்குத் தேவை வேறுபாடற்ற உலகம். ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக்கொடை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதாகும். இச்சிந்தனை 2000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும். இவ்வாறு முனைவர் ம.ராஜேந்திரன் கூறினார்.

Logo of Classical Tamil meet unveiled
The Hindu, October 24, 2009

CHENNAI: The image of saint-poet Thiruvalluvar’s statue in Kanyakumari, lashed by waves caused by the tsunami and encircled by seven icons from the Indus Valley Civilisation, forms part of the logo of the World Classical Tamil Conference to be held in Coimbatore next June.

The logo emphasises the ideal of the mankind that it should always be free of narrow walls of race, creed and casteism. The message is found in a palm leaf manuscript at the bottom of the statue. This concept (“pirapokkum ella uyirkkum”) has been declared the motto of the meet.

The figures of the Indus Valley Civilisation icons, found in the logo, symbolise the Dravidian civilisation, which is regarded as one of the four ancient civilisations, according to an official release.

The number of icons stresses the importance of ‘seven’ in the lives of Tamils.

On Friday, Chief Minister M. Karunanidhi unveiled the logo at the Secretariat in the presence of Deputy Chief Minister M.K. Stalin, Information Minister Parithi Ellamvazhuthi, scholars V.C. Kulandaiswamy and Iravatham Mahadevan, Chief Secretary K.S. Sripathi, Tamil University Vice-Chancellor M. Rajendran, and Special Officer for the conference K. Allaudin.

சிந்து சமவெளி குறியீடுகளுடன் செம்மொழி மாநாட்டுச் சின்னம்*முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

தினமலர், அக். 24, 2009
சென்னை:உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான சின்னத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். கோவையில் வரும் 2010 ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான சின்னம் (லோகோ) உருவாக்கப் பட்டுள்ளது. இதை, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழறிஞர்கள் வா.செ. குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.

தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலர் ஞான தேசிகன்,செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன், தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் மாநாட்டுக்கான இந்த சின்னம், பல்வேறு சிறப்புகளை கொண்டது. கடல்கோள்களை எதிர்கொண்டும், கால வெள்ளத்தைக் கடந்தும் இளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்வதை குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் பாதங்களில் சுருளும் அழகிய பின்னணியில், இந்த சின்னம் உருவாக் கப்பட்டுள்ளது.

வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கு ஏற்ப மூன்று விரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படும், திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள், எழுத்துப்பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழ மண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.

படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன. சின்னத்தில் ஏழு குறியீடுகள் இடம்பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்.ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு, திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத் துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத் தொகை ஏழு என்ற எடுத்துக் காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்குகின்றன.

இம்மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந் துள்ளது. ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள இது, இன்றைய உலகுக்குத் தமிழ் செம்மொழி வழங்கும் கொடையாகக் கருதப் படுகிறது. ஏற்றத் தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா, உலகுக்கு அளிக்கும் கருத்துக் கொடை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதாகும். இச்சிந்தனை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி வழங்கியது என, அரசு விளக்கமளித்துள்ளது.

0 comments: